இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படப்படிப்புத்தளத்தில் ஏற்பட்ட விபத்தின் போது 3 பேர் உயிரிழந்திருந்த சம்பவத்தையடுத்து படப்பிடிப்பு இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இவ்விபத்து குறித்து விபத்தை ஏற்படுத்தியிருந்த பாரம் தூக்கியை இயக்கியவர் கைது செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து இயக்குநர் சங்கர் மற்றும் நடிகர் கமல் ஆகியோர் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தனர். தொடர்ந்து நடிகை காஜல் அகர்வாலும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார்.
இந்நிலையில் இவ்விபத்துத் தொடர்பில் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கும் நடிகர் கமலுக்கும் இடையே கடிதம் மூலம் மோதல் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அத்துடன் ஏற்கனவே இந்தியன்-2 படத்திற்கு தமது திகதிகளை வழங்கிய ஏனைய நடிகர்கள் அந்த நாட்கள் கடந்துவிட்ட நிலையில் வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி சென்றுள்ளதால் இனிமேல் அவர்களது தேதிகள் கிடைக்கும் பட்சத்தில் தான் மீண்டும் படப்பிடிப்பை நடத்த முடியும் என்ற சிக்கலில் தள்ளப்பட்டுள்ளது இந்தியன்-2 படக்குழு.